நடிகர் லியோ பிரபு காலமானார்
நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90. தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார்.
சென்னை: நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90. தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் இன்று மாலை 6 மணி அளவில் காலமானார்.
பருவகாலம், இது எங்க நாடு, அண்ணே அண்ணே, நான் மகான் அல்ல, புதிர், பேர் சொல்லும் பிள்ளை, ரெண்டும் ரெண்டும் அஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு மூத்த நாடக ஆசிரியர், எழுத்தாளர். புகழ்பெற்ற பாய்ஸ் நடக நிறுவனத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். எஸ்.வி.சகஸ்ரநாமம் போன்ற தமிழ் நாடகவியல் மேதைகளுடன் சேவா ஸ்டேஜ், ஒய். ஜி. பார்த்தசாரதி, பிரபு போன்றவர்களுடன் பல ஆண்டுகள் நாடகத் துறையில் பயணித்தவர். பின்னர் தனது சொந்த நாடகக் குழுவான ஸ்டேஜ் இமேஜை நிறுவி பல நாடகங்கள் அரங்கேற்றியுள்ளார். அத்துடன் பல தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துள்ளார்.
இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில் 1990ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி பாராட்டியது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.