செய்திகள்

சாலையோர மக்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கிய நயன்தாரா!

சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசு வழங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

DIN

சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசு வழங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா திருமணம் கடந்தாண்டு ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவா்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகியது.

வாடகை தாய் சட்டத்தில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பில் விசாரணை மேற்கொண்டு சட்டத்தின்படி தான் குழந்தை பெற்றதாக அரசு தெரிவித்தது.

இரட்டைக் குழந்தைகள் பிறந்து முதல் புத்தாண்டை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இந்தாண்டு கொண்டாடியுள்ளனர். இரட்டைக் குழந்தைகளுடன் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசுகளை வழங்கினர்.

இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT