செய்திகள்

சப்த சாகரதாச்சே எல்லோ: ரசிகர்களின் ஆதரவில் கூடுதல் காட்சிகள் !  

DIN

ரக்‌ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடிப்பில் வெளியான கன்னட திரைப்படம் ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ' படம் கடந்த செப்.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதி.  

கார் ஓட்டுநரான காதலன், தன் காதலி சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டு செய்யாத குற்றத்திற்காக பணத்தை வாங்கிக்கொண்டு சிறைக்குச் செல்கிறான். அங்கு, அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் வெளியில் இருக்கும் காதலியின் நிலையுமாக கதை விரிகிறது. இறுதியில் ஒரு டிவிஸ்டைக் கொடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான சைட் பி-க்கு  முன்கதைச் சுருக்கத்தைக் கூறியிருக்கின்றனர். 

கன்னட ரசிகர்களை மட்டுமின்றி இப்படம் பலரையும் கவர்ந்து வருவதால் அடுத்த பாகமான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி’ ரசிகர்களிடயே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. முதல் பாகத்தைவிட இந்தப் பாகத்துக்கு சென்னையில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

SCROLL FOR NEXT