செய்திகள்

புது வீடு வாங்கிய பிரபல செய்தி வாசிப்பாளர்!

DIN

பிரபல செய்தி வாசிப்பாளரும், சீரியல் நடிகையுமான சரண்யா துராடி புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார். 

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து, நெஞ்சம் மறப்பதில்லை, வைதேகி காத்திருந்தாள் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். 

செய்திவாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் இருந்தவர் சரண்யா துராடி. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார். 

தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நாயகியாக சரண்யா நடித்தார். 2020ஆம் ஆண்டு ஆயுத எழுத்து தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து, வைதேகி காத்திருந்தால் தொடரிலும் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். 

இந்த நிலையில், சரண்யா துராடி புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார். புது வீட்டின் புகைப்படங்களை சரண்யா துராடி பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT