ஜெயிலர்: ரஜினி, நெல்சனை பாராட்டிய கமல்!
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இந்தப் படம் முதல் வார முடிவில் சுமார் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜெயிலர் 4 நாள்கள் வசூல் எவ்வளவு?
கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் ஜெயிலர் திரைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வரும் நிலையில், கமல்ஹாசனின் பாராட்டு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.