முகப்பு
செய்திகள்

இந்த வார டாப் 10 தொடர்களின் டிஆர்பி பட்டியல்! 

இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 10  தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

Updated On : 22 டிசம்பர் 2023, 6:34 pm IST
பகிர்:

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை  ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை  டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 10  தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

சன் டிவியின் புதிய சீரியலான சிங்கப் பெண்ணே தொடர் 11.59 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கயல் சீரியல் 11.55 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

சுந்தரி சீரியல் 10.04 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

எதிர் நீச்சல் தொடர் 9.75 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து நான்காவது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

வானத்தைப் போல சீரியல் 9.42 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது.

இனியா தொடர் 8.20 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது.

சென்ற வாரம் 8-வது இடத்தில் இருந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 7.72  டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

சென்ற வாரம் 7-வது இடத்தில் இருந்த ஆனந்த ராகம் தொடர் 7.45 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் 7.22 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளது. ஆஹா கல்யாணம் தொடர் 6.68 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 10-வது இடத்தில் உள்ளது.

எப்போதும் போல சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 6 இடங்களை பிடித்துள்ளது. அடுத்த  இடங்களை விஜய் டிவியின் தொடர்கள் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments