இன்று நடைபெறுவதாக இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்று ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந்தது.
‘விஜய் ஆண்டனி 3.0’ இசைக் கச்சேரிக்கு செல்லும் பாா்வையாளா்கள் கட்டணமின்றி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்திருந்ததும் குறிப்பிட்டிருந்தது.
தற்போது, காவல்துறையினரின் அறிவுரையின் பேரில் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. .
விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்ததாவது:
வணக்கம் நண்பர்களே,
சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.
புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்.
உங்கள் விஜய் ஆண்டனி எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.