பைரவா படம் நீண்ட காலங்களுக்கு நினைவிருக்கும்: சிவராஜ்குமார் நம்பிக்கை!
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது புதிய படம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
சமீபத்தில் கன்னடத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ- சைடு ஏ, சைடு பி என இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியான படம் நல்ல வரவேற்பினை பெற்றன.
தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். இதன் பெயர் பைரவா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் சிவராஜ்குமார், "இந்தப் படம் குறித்து நீண்ட காலம் பேசுவார்கள். பைரவா கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கதையின் ஒவ்வொரு துணுக்கும் எனக்கு பிடித்த்ருக்கிறது; ஹேமந்த் குழுவுடன் பணியாற்றுவதில் ஆவலுடன் இருக்கிறேன்" என்றார்.
இது குறித்து இயக்குநர், “இந்தப்படம் எனது பேராவலான திரைப்படம். இந்தப் படத்தின் கதை பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதை. பழங்கால கதையாக இருந்தாலும் நிகழ்கால போர் முறைகளை போன்ற படமாக்கும் விதம் இருக்கும். இந்தப் படத்தில் நான் உருவாக்கவிருக்கும் அனுபவத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் நடித்ததின்மூலம் சிவராஜ்குமாருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் கேப்டன் மில்லரிலும் நடித்திருந்தார்.
இந்த பைரவா படம் கன்னடம் உள்பட தமிழ் தெலுங்கில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.