மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!
நடிகர் சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.
இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், புகழ், பிரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியான திரைப்படம் அயோத்தி. மத நல்லிணக்கத்தையும் மனிதர்களின் மேன்மையையும் மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகர் சசிகுமாருக்கும் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது.
இந்த நிலையில், இயக்குநர் மந்திரமூர்த்தி கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்குவார் என அறிவிப்பு வெளியானது.
தற்போது, இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி வெற்றியைத் தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.