காந்தாரா சேப்டர் - 1 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிக்க: பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன்: காவ்யா தாபர்
படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். தற்போது, தென்னிந்தியளவில் பிரபலமான நடிகராகியுள்ளார். ஹனுமன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையே, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானதுடன் வேறெந்த புதிய அப்டேட்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகி வரும் காந்தாரா சேப்டர் - 1 திரைப்படம் அடுத்தாண்டு (2025) அக். 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.