பாராட்டுகளைப் பெறும் கிஷ்கிந்தா காண்டம்!
நடிகர் ஆசிஃப் அலி நடிப்பில் உருவான கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலையாள சினிமா இந்தாண்டிலும் நல்ல திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில படங்களைத் தவிர்த்து பெரும்பாலும் கதையம்சமுள்ள படங்களே திரைக்கு வந்துள்ளன.
அந்த வகையில், ஓணம் வெளியீடாக டோவினோ தாமஸின் ஏஆர்எம் மற்றும் ஆசிஃப் அலியின் கிஷ்கிந்தா காண்டம் திரைப்படங்கள் வெளியாகின.
Advertisement
Advertisement
இதில், ஏஆர்எம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக வெற்றியை அடைந்துள்ளது.
அதேநேரம், தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் உருவான கிஷ்கிந்தா காண்டம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் முற்றிலும் எதிர்பார்க்காத மன மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் இதுவரை ரூ. 4.5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
நடிகர் ஆசிஃப் அலி தலவன் (thalavan), அடியோஸ் அமிகோ(adios amigo) ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கிஷ்கிந்தா காண்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.