பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது, கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ள படம் 'ரகு தாத்தா'. இவர் தெறி ரீமேக் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார்.
இதையும் படிக்க: ஆச்சரியப்படுத்தும் அயலான் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Advertisement
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் ’தி ரூட்’ தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் பொங்கல் கொண்டாடியுள்ளார். இந்நிகழ்வில் நடிகர் கதிர், தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.