இலங்கையில் சிக்கித் தவிக்கும் பராசக்தி படக்குழுவினர்?
பராசக்தி படம் குறித்து...
பராசக்தி படக்குழுவைச் சேர்ந்த சிலர் இலங்கையில் சிக்கித் தவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியது.
இங்கு, 1960-களின் காலகட்டத்திற்கான நம்பகத்தன்மைக்காக பழைய ரயில் நிலையம், கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் என காட்சிகள் படமாக்கப்பட்டன.
Advertisement
இந்த நிலையில், இலங்கை படப்பிடிப்பு முடிந்ததால் இயக்குநர் சுதா கொங்காரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர்.
ஆனால், படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இலங்கையில் படப்பிடிப்பை நடத்திக்கொடுக்க ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தததாகவும் படப்பிடிப்பு முடிந்ததும் மீதத் தொகையைச் செலுத்ததாதல் அந்நிறுவனம் பராசக்தியில் பணியாற்றிய சிலரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளனாராம்.
இதனால், அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் நடித்த கோட் படத்தின் படப்பிடிப்பும் இலங்கையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்ததும் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தாமல் வந்ததால்தான் பராசக்தி படக்குழுவினரின் பாஸ்போர்ட்டை அந்நிறுவனம் வாங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அஜித்தின் திரைவாழ்வில் ஒரு... குட் பேட் அக்லி - திரை விமர்சனம்!