நடிகை மிருணாள் தாக்குர் காதல் கிசுகிசுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
நடிகை மிருணாள் தாக்குர் வளர்ந்துவரும் இளம் நடிகையாக உள்ளார். சீதா ராமம் திரைப்படத்திற்குப் பின், நானியுடன் நடித்த ஹாய் நானா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து, நடிகர் தனுஷும் மிருணாள் தாக்குரும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மிருணாள் நடித்த திரைப்பட நிகழ்வொன்றில் தனுஷ் கலந்துகொண்டார். மேலும், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனுஷ் பதிவுக்கு மிருணாள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே, சில நாள்களாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயருடன் மிருணாள் நெருக்கமாக இருப்பதாக வதந்தி பரவியது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிருணாள் தன் தாயுடன் பேசிச்சிரித்தபடி விடியோ ஒன்றை வெளியிட்டு, “அவர்கள் பேசுகிறார்கள். நாங்கள் சிரிக்கிறோம்” என்றதுடன், “வதந்திகள் எப்போதும் இலவச விளம்பரங்களே. எனக்கு அது பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.
இது மிருணாள் இருவரில் யாரையும் காதலிக்கவில்லையோ என எண்ண வைத்துள்ளது.
இதையும் படிக்க: துல்கர் சல்மானுக்கே இந்த நிலைமையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.