துரந்தர் திரைப்படம் செய்த புதிய சாதனை!
துரந்தர் திரைப்படம் செய்த புதிய சாதனை குறித்து...
துரந்தர் திரைப்படம் ஹிந்தி திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
துரந்தர் படம் இதுவரை உலகளவில் ரூ. 1006. 7 கோடி வரை வசூலித்து இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இந்தாண்டு விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான சாவா படத்தின் ஹிந்தி மொழி வசூலையும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ஸ்த்ரீ -2 படத்தின் ஹிந்தி மொழி வசூலையும் துரந்தர் திரைப்படம் முறியடித்துள்ளது.
Advertisement
Advertisement
புஷ்பா - 2 திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் ரூ. 800 கோடியைக் கடந்து வசூல் செய்தது. இந்த நிலையில், துரந்தர் திரைப்படம் ஹிந்தி மொழியில் வெளியான ஜவான், பாகுபலி -2 உள்ளிட்ட ஹிட் படங்களின் ஹிந்தி மொழி வசூலை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் துரந்தர் திரைப்படம் கடந்த டிச.5-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
பாகிஸ்தான் நாட்டில் உளவாளியாகச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு உதவும் பாத்திரத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங்கின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பி62 ஸ்டூடியோஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை வெளியிட்டது. துரந்தர் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.
துரந்தர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் டிச. 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The film 'dhurandhar' has secured the second position among the highest-grossing films in the Hindi language.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.