மறுவெளியீடாகும் மாநாடு!
மாநாடு திரைப்படம் மறுவெளியீடாகிறது...
நடிகர் சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு திரைப்படம் மறுவெளியீடாகிறது.
நடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
ரூ. 100 கோடி வரை வசூலித்து மீண்டும் சிம்புவின் திரை வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுத்தது. நடிகர் எஸ். ஜே. சூர்யாவுக்கும் பெரிய ஹிட்டாக அமைந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம்!
இந்த நிலையில், நடிகர் சிம்புவின் 41-வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (ஜன. 31) முதல் இப்படம் மறுவெளியீடாக உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.