முகப்பு
ஃபகத் ஃபாசில், எஸ்.ஜே.சூர்யா.
செய்திகள்

ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!

மலையாள இயக்குநர் விபின் தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது...

செய்திகள்

ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!

மலையாள இயக்குநர் விபின் தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது...

Updated On : 13 ஜூன், 2025 at 6:53 AM
ஃபகத் ஃபாசில், எஸ்.ஜே.சூர்யா.
பகிர்:

மலையாள இயக்குநர் விபின் தாஸ் ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட்டது எனக் கூறியுள்ளார்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் விபின் தாஸ் பிரபல இயக்குநராக மாறியிருக்கிறார்.

இவரது இயக்கத்தில் மோகன்லால் நடிப்பதாகவும் எஸ்.ஜே.சூர்யா - ஃபக்த் ஃபாசில் புதிய படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் விபன் தாஸ் இது குறித்து கூறியதாவது:

மோகன் லால் சாரிடம் ஒரு கதைச் சொல்லியிருந்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

அடுத்ததாக, எஸ்.ஜே.சூர்யா - ஃப்கத் ஃபாசிலும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படமும் தேதி, பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டது.

இவர்களுக்குப் பதிலாக மற்ற 2 நடிகர்களை வைத்து இந்தப் படம் விரைவில் எடுப்பேன் எனக் கூறினார்.

விபின் தாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற வாழை படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →