இன்று முதல் புதிய நேரத்தில் இரு தொடர்கள்!
இரு தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது குறித்து...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகளே என் மருமகளே, பூங்காற்று திரும்புமா தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை ஈர்ப்பதற்காகவும் டிஆர்பி ரேட்டிங்கை கூட்டுவதற்காகவும் தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியமைப்பது வழக்கமான ஒன்று.
அதன்படி, மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று(நவ. 17) முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு மகளே என் மருமகளே தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் இயக்குநர் ஹரிஸ் ஆதித்யா இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மகளே என் மருமகளே. இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.
அதேபோல, தாய் கிரேயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தொடரான பூங்காற்று திரும்புமா தொடர் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், இன்று(நவ. 17) முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் முத்தழகு தொடர் பிரபலம் ஷோபனா நாயகியாகவும் மோதலும் காதலும் தொடரின் நாயகன் சமீர் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் ஆனந்த் பாபு, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க: பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?
The broadcast time of the series Magale En Marumagale and Poongatru Thirumama, which are being aired on Vijay TV, has been changed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.