நாக சைதன்யா பிறந்த நாளில் 24-ஆவது படத் தலைப்பு அறிவிப்பு!
நடிகர் நாக சைதன்யாவின் 24-ஆவது படத்தலைப்பு குறித்து...
நடிகர் நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 24-ஆவது படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இயக்கி வருகிறார்.
இந்தப் படத்திற்கான திரைக்கதையை சுகுமார் எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா, சுகுமார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
கடைசியாக நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் நடித்த தண்டேல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தியது.
புராணக்கதை தொடர்பான புதிய படத்தில் (என்சி24) நடித்து வருகிறார். இதன் மேக்கிங் விடியோ பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘விருஷகர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
The title of actor Naga Chaitanya's 24th film has been announced on the occasion of his birthday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.