நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
காந்தாரா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் - 1 என்கிற திரைப்படத்தை எடுத்துள்ளார். மன்னர் காலக்கதையாக உருவான இது இன்று உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
கதை கொஞ்சம் சோர்வை அளித்தாலும் உருவாக்க ரீதியாக மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து மொழிகளிலும் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
முக்கியமாக, ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் உள்ளிட்டோர் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.
இதனால், இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வசூலை அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.