டாக்ஸிக் ஆழமான உளவியல் அம்சங்கள் கொண்ட திரைப்படம்: யஷ்
டாக்ஸிக் குறித்து யஷ்...
நடிகர் யஷ் டாக்ஸிக் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் யாஷ் தனது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற சினிமாகான் (cinemacon - 2026) நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் யஷ் டாக்ஸிக் குறித்து பேசினார்.
Advertisement
அதில், “முதன்முறையாக எங்கள் திரைத்துறையிலிருந்து இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இதன் கதைக் கரு பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் சண்டைப் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்சன் நிறைந்த கேங்ஸ்டர் படம் போல தோன்றும். ஆனால், இதில் ஆழமான உளவியல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு இருமை நிறைந்த கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.”
இயக்குநர் கீது மோகன்தாஸுடன் பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. அவர் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பார்வையைக் கொண்டு வந்துள்ளார். படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருப்பதோடு, பார்வையாளர்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” எனக் கூறினார்.