முகப்பு
செய்திகள்

நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

கருப்பு திரைப்படம் குறித்து சூர்யா...

Updated On : 27 ஏப்ரல் 2026, 2:51 pm IST
கருப்பு - dot com
பகிர்:

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட நாள்களாக வெளியீட்டைச் சந்திக்காமல் இருந்ததால் சூர்யா ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (ஏப்.26) நடைபெற்றது. இதில், சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, “கருப்பு இவ்வளவு தூரம் வந்ததற்கு கருப்புசாமியின் துணையே காரணம் என நினைக்கிறேன். இப்படத்தின் கதாநாயகன் நான் கிடையாது, கருப்புசாமிதான். படம் பார்த்தவர்கள் முதல்பாதி உணர்வுப்பூர்வமாகவும் இரண்டாம்பாதி திரையரங்க தருணங்கள் அதிகம் இருப்பதாகவும் கூறினார்கள். மே 14 உங்க கையில்தான் இருக்கிறது. கண்டிப்பாக படம் உங்களுக்குப் பிடிக்கும். நம்பிக்கை இருக்கிற இடத்தில்தான் அதிசயம் நிகழும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Suriya has spoken about the film Karuppu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.