முகப்பு
செய்திகள்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய்குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

இளம் மலையாள நடிகை அனுராகா நம்பியாரின் குற்றச்சாட்டு குறித்து...

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:19 PM
அனுராகா நம்பியார். நடுவில் - விஜய்குமார், அவரது மனைவி. - படங்கள்: இன்ஸ்டா / அனுராகா நம்பியார், நக்‌ஷத்திரா மூர்த்தி.
பகிர்:

மலையாள நடிகை அனுராகா எஸ். நம்பியார் தன்னை ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம், ’எரும சாணி’ புகழ் விஜய்குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்டுள்ளார்.

கேரத்தைச் சேர்ந்த நடிகை அனுராகா எஸ். நம்பியார் (23 வயது) குறும்படங்கள் மூலம் பிரபலமானாவர். அடிபொலி என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ரெசார்ட் எனும் இணையத் தொடர் ஒன்றில் ஸ்ரீநிதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் ரெசாட் எனும் இணையத் தொடர் வாரத்துக்கு 4 எபிசோடுகள் வெளியாகின்றன. மார்ச் 13 முதல் வெளியாகும் இந்தத் தொடரில் 100 எபிசோடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடரை பிரவீன் பென்னட் இயக்குகிறார்.

Advertisement

இந்தத் தொடரில் நாயகனாக விஜய் குமார் நடிக்கிறார். எரும சாணி யூடியூப் மூலம் பிரபலமான இவர் அருள்நிதியை வைத்து டி. பிளாக் எனும் திரைப்படத்தை இயக்கினார். தற்போது நடிகாரகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரெசார்ட் இணையத் தொடரில் ஓராண்டு நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு படப்பிடிப்பு நடத்தாமல், சம்பளமும் தராமல் ஏமாற்றப்பட்டதாக நடிகை அனுராகா எஸ். நம்பியார் விடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

அதிகாலை 3 மணி ஆகிறது. இந்த நேரத்தில் நான் விடியோ பதிவிடுவேன் என நினைக்கவில்லை. தற்போதுதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வருகிறேன்.

ஓராண்டாக படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பே நடத்தவில்லை. வேறு படங்களில் நடிக்கவும் வேண்டாம் எனக் கூறினார்கள். நான்கு மாதங்களாக நான் நடிக்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்கள். எனக்குப் பொருளாதார ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

படத் தயாரிப்பிடமும் கேட்டுவிட்டேன். அவர்கள் விஜய்குமாரைக் கேளுங்கள் என்கிறார்கள். கேஷியரிடம் கேட்டால் அவரும் என்னென்னவோ சொல்கிறார். நான் கேரளத்தில் சிறிய கிராமத்தில் இருந்து வருகிறேன். எனக்கு எந்தப் பின்பிலமும் இல்லை. எனக்கு கனவுகள் இருக்கிறது. என்னை நடிக்க வேண்டாம் எனக் கூறுவதற்கு இவர்கள் யார்? விஜய்குமாரின் மனைவி என்னை அப்படிக் கூறுகிறார்.

எனக்கு வலிப்பு வந்தது. அதனால், மருத்துவமனைய்ல் சேர்க்கப்பட்டேன். எனது நண்பர் என்னைப் படத்த்ல் இணைத்த விஜய்குமாரிடம் பேசினார். விஜய் குமார் அதற்கு,“அப்படியானல் அவரை நடிக்க வரவேண்டாம்” எனக் கூறுகிறார்.

அப்போது அவரது மனைவி, “நீ வேண்டுமானால் அவளைத் திருமணம் செய்து உடன் வைத்துக்கொள். கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் வந்து நடிக்கச் சொல்லுடா மயிரே... எனக் கூறினார்.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சரியில்லை. புதிய இளம் கலைஞர்களை மதிப்பதில்லை. தரமற்ற உணவுகள் விநியோகிக்கப்படுகிறது. சம்பளம் கொடுத்தால் நாங்களே நல்ல உணவு உண்போம். இதையெல்லாம் கேட்டால் ரெட் கார்டு என மிரட்டுவார்கள். என் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் கனவுகளைச் சுமந்துவரும் இளம் கலைஞர்கள். எனக்கு வலிப்பு வரவில்லை எனில் தற்கொலை செய்திருப்பேன். எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. இனி இனிமேல் யாருக்கும் இதுபோல நடக்ககூடாது எனக் கூறியுள்ளார்.

இந்த விடியோவில் கமென்ட் செய்து நீக்கியதற்கு நக்‌ஷத்திராவை இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீரியல் துணை நடிகைகள் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதிரியான சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

summary

This is my limit and i cannot stay silent scam ares happend says actress Anugraha S. Nambiar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.