நடிகர் பிரதீப் ரங்கநாதன் தேவைகளைக் கூச்சப்படாமல் கேட்க வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்லூரி நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், ”வாழ்க்கை மிக சிறியது. நமக்கான தேவைகளைக் கேட்க எப்போதும் கூச்சப்படாதீர்கள். பிறர் என்ன நினைப்பார்கள் என யோசிக்காமல் தைரியமாகக் கேட்டு விடுங்கள். கேட்டு மறுக்கப்பட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், அது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதுதான் முக்கியம்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.