ரூ. 50 கோடி வசூலித்த தாய் கிழவி!
தாய் கிழவி வசூல் குறித்து...
நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி அட்டகாசமான வசூலைச் செய்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டில் வெளியான திரைப்படங்களிலேயே நல்ல வணிகத்தைக் கொடுத்த படம் என்கிற பெயரையும் தாய் கிழவி பெற்றுள்ளது.