முகப்பு
செய்திகள்

எம்ஜிஆர் பற்றி அவதூறாகப் பேசிய தெலுங்கு நடிகர்! வலுக்கும் கண்டனம்!

எம்ஜிஆர் பற்றி அவதூறாகப் பேசிய தெலுங்கு நடிகர் பற்றி...

Updated On : 12 மார்ச் 2026, 3:57 pm IST
எம்ஜிஆர் - கோப்புப் படம்
பகிர்:

பழம்பெரும் தமிழ் நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். பற்றி அவதூறாகப் பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனம் வலுக்கிறது.

தெலுங்குத் திரையுலதில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய குணச்சித்திர நடிகரான ராஜேந்திர பிரசாத் மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகரான காந்தாராவ் பற்றி புகழ்ந்து பேசினார்.

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் - கோப்புப் படம்

தெலுங்கு சினிமாவில் காந்தாராவின் பங்களிப்பு பற்றிப் பேசிய ராஜேந்திர பிரசாத், அவர் திரையில் கத்திச்சண்டை போடுவதில் வல்லவர் என்றும், அவரைப் பார்த்தால் தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர். கூட பயப்படுவார் என்று மேலும் சில கருத்துக்களை அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement

ராஜேந்திர பிரசாத் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ரசிகர்களும் தமிழ்த் திரையுலகினரும் அவர் பேசியதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான நாசர் கண்டனம் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். மேலும், நடிகர் சங்கம் சார்பில் ராஜேந்திர பிரசாத் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றுப் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எம்.ஜி.ஆர். பற்றி அவதூறாகப் பேசிய ராஜேந்திர பிரசாத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

summary

Strong condemnation arise for a telugu actor who made defamatory remarks about MGR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments