முகப்பு
செய்திகள்

தாய் கிழவி - இந்தக் காட்சியை ஏன் நீக்கினர்?

தாய் கிழவியின் நீக்கப்பட்ட காட்சி குறித்து...

Updated On : 17 மார்ச், 2026 at 7:53 AM
நடிகர்கள் அருள் தாஸ், பால சரவணன், சிங்கம் புலி
பகிர்:

தாய் கிழவி திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது தாய் கிழவி திரைப்படம்.

நீண்ட நாள் கழித்து கிராம வாழ்க்கையைப் பதிவு செய்த வகையிலும் கவனம் பெற்றதால் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், நீக்கப்பட்ட காட்சியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் அருள்தாஸ் தன் தாயான பவுனுத்தாய் குறித்து பால சரவணனிடம் பேசும் காட்சி மிக உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டிருந்தது.

வசனங்களுடன் அருள் தாஸின் நடிப்பும் நன்றாக இருந்ததால் ரசிகர்கள் பலரும் இப்படியொரு காட்சியை ஏன் நீக்கினார்கள்? எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

summary

actor radhika sarathkumar's thaai kizhavi deleted scene viral on social media

முழு கட்டுரையைப் படிக்க →