ரசிகரின் கன்னத்தில் அறைந்தாரா சல்மான் கான்! வைரலான விடியோ பதிவு!
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘பாரத்’என்ற படம் ரம்ஸான் அன்று வெளியானது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘பாரத்’என்ற படம் ரம்ஸான் அன்று வெளியானது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தது. அதைக் காண சல்மான் கான் வந்தார். அவரைப் பார்க்க ரசிகர் கூட்டம் சூழ, சல்மான் கானின் பாதுகாவலர்கள் அவர்களை விலக்கி வழி அமைத்துத் தந்தனர். இந்த நேரத்தில் சல்மான் கானை பார்க்க முயன்ற ஒரு குழந்தை ரசிகரிகரிம் பாதுகாவலர் அநாகரிகமாக நடந்து கொள்ளவே, அதைப் பார்த்து கோபமடைந்த சல்மான் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பாதுகாவலர் கன்னத்தில் அறைந்துவிட்டார்.
ரசிகர் ஒருவர் இந்தக் காட்சியை தனது செல்ஃபோனில் பதிவு செய்திருக்கவே, இது சமூக வலைத்தளங்களில் வெளியாக வைரலாகிவிட்டது. சல்மான் கான் செய்தது சரியென்றும், என்னதான் இருந்தாலும் ஒருவரை பொதுவெளியில் ஓங்கி கன்னத்தில் அடித்தது தவறென்றும் இருதரப்பு வாதங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.