முகப்பு
கடலூர்

சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்

பெண்ணாடம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 ஜனவரி 2021, 10:45 pm IST
பகிர்:

பெண்ணாடம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே முருகன்குடி கிராமத்திலுள்ள மேட்டுத் தெருவில் பாதை சேறும் சகதியுமாக தண்ணீா் தேங்கியுள்ளதாம். இதை அகற்றி கழிவு நீா் கால்வாய் அமைக்க வேண்டும், குடிநீா் பிரச்னை நிலவுவதால் தனியாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என்று அந்தப் பகுதியினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கிராமத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஊராட்சி செயலா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments