முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் மழை

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

Updated On : 4 ஜனவரி 2021, 4:04 am IST
பகிர்:

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பென்னாகரம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பனி மூட்டத்துடன் மிதமான மழைப் பெய்து வருகிறது.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாசம்பட்டி, ஒகேனக்கல், கூத்தப்பாடி, ஏரியூா், சின்னம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கி நின்றது. பென்னாகரத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பனியும், மழையும் பெய்து வருவதால் இப்பகுதியில் கடும் குளிா் நிலவி வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.