தமிழகத்தில் சுதந்திர காலத்தில் இருந்தே சினிமாவும், அரசியலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கத் தொடங்கியது. அந்த வரிசையில் திராவிட கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கும். திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் போன்றவற்றின் மூலம் அரசியல் தலைவர்கள் மக்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்தனர்.
சினிமா புகழ் மூலம் மக்கள் மத்தியில் அரசியல் விதைகள் தூவப்பட்டன. திரைத்துறைதான் என்றாலும் திரைக்கு பின்னால் இருப்பவர்களைவிட திரைக்கு முன்னாள் வருபவர்களுக்கு மக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டவர் தான் எம்ஜிஆர். அவர் தூவிய இந்த விதை தான் இன்றும் திரைத்துறையில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களுக்கு முதல்வராகும் எண்ணம் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் எம்ஜிஆர், பிற்காலத்தில் அவர் முதல்வரானார். அவருக்கு அடுத்து அந்த உச்ச நட்சத்திர இடத்தை ரஜினிகாந்த் நிரப்பினார். அதனால், அவரும் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பங்கள் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.
ரஜினி தனது திரைப்படம் நல்ல வியாபாரம் ஆவதற்காக அரசியல் பிரவேசம் குறித்து குழப்பத்தை கிளப்பி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவருடைய ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார் அப்போது வருவார் என்று ஏங்கி ஏங்கியே பல வருடங்களை கழித்துவிட்டனர்.
இதற்கிடையில், திரைத்துறையில் இருந்து விஜயகாந்த் அரசியலில் களமிறங்கி பெருமளவு வரவேற்பு பெற்றார். அது ரஜினிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால், மீண்டும் சில நாட்கள் அரசியல் குறித்து மௌனம் காத்தார்.
பின்னர், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு கமல்ஹாசன் திடீரென்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க ரஜினிக்கு அது கூடுதல் நெருக்கடி தந்தது. அதனால், ஒருவழியாக டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் குறித்தான முடிவை அறிவிக்கப்போவதாக ரஜினி தெரிவித்தார். அதன்படி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் பரபரப்பு தான். இந்நிலையில், அரசியலில் ஜெயிக்கப்போவது ரஜினியா கமலா என்ற விவாதங்கள் எழத்தொடங்கின.
ஆனால், இதற்கிடையில் நடிகர் விஜய் ரஜினியிடம் இருந்து அரசியல் பாடத்தை கற்று வருகிறார்.
எம்ஜிஆர், ரஜினி வரிசையில் தற்போதயை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர இடத்தில் இருப்பது விஜய் தான். இவரும் அரசியலில் களமிறங்குவது குறித்தான பேச்சுகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கும். அவருடைய ஒரு படத்தின் தலைப்புக்கே மிகப் பெரிய பிரச்சனை எழுந்து வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தாமதமாக வெளியானது. அதன்பிறகு அவருடைய அரசியல் பேச்சுகள் குறையத் தொடங்கியது.
விஜய், தனது பாதையிலேயே முன்பு பயணித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் நகர்வு மூலம் ஒவ்வொன்றாக படித்து அதன் மூலம் தனக்கான அரசியல் களத்துக்கு பாதை அமைக்கிறார்.
தனக்கு முன் ரஜினி என்ன செய்கிறார் என்பதையும் அவர் மீது விழும் விமரிசனங்களை என்ன என்பதையும் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
ரஜினி மீது எழும் விமரிசனங்கள் என்ன?
இதை எப்படி விஜய் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்?
மேலும், வரும் காலங்களிலும் ரஜினி மீது வைக்கும் விமரிசனங்கள் மூலம், தொடர்ந்து அரசியல் பாடங்களை கற்றுக்கொண்டு விஜய் அரசியல் காய் நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்-இன் மிக முக்கியமான அரசியல் பாடம்
அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி களமிறங்குவதாக கூறியிருப்பதால் அதன் முடிவுகள் நிச்சயம் விஜய்-க்கு முக்கிய பாடமாக அமையவுள்ளது. கூடுதலாக தற்போது கமலும் களத்தில் இருப்பதால் தேர்தல் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை நிச்சயம் இருவரும் இணைந்து விஜய்-க்கு கற்பிக்கவுள்ளனர்.
மொத்தத்தில நடிகர் விஜய்-க்கு ரஜினி நன்றாக அரசியல் பாடத்தை கற்பித்து வருகிறார். விஜய்யும் நன்றாக பாடம் படித்து வருகிறார்.