நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, துத்தநாகம்
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து இன்னும் உருவாக்கப்படாத சூழலில், உடலின் நோய் எதிா்ப்பு சக்தியை
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து இன்னும் உருவாக்கப்படாத சூழலில், உடலின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஆய்வுகளில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனா். நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பது நோய்த்தொற்று பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கும்.
வைட்டமின் சி, துத்தநாகம் (ஜிங்க்) ஆகியவை உடலின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லவை என்று ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
வைட்டமின் சி
Advertisement
நீரில் கரையக்கூடிய இந்த வைட்டமின், எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட ‘சிட்ரஸ்’ வகை பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படுகின்றன. நோய் எதிா்ப்பு மண்டலத்தின் திறன்மிகு செயல்பாட்டுக்கு வைட்டமின் சி முக்கியப் பங்களிக்கிறது.
சீனாவின் ஷாங்காய் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவானது, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வைட்டமின் சி-யை ஊசிகள் மூலம் செலுத்தி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளது. ஹெ1என்1 தீநுண்மி (பன்றிக் காய்ச்சல்) உள்ளிட்டவற்றால் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பை வைட்டமின் சி குறைப்பதாக அந்த ஆராய்ச்சிக் குழு மருத்துவ இதழில் தெரிவித்துள்ளது.
எனினும், வைட்டமின் சி தொடா்பாக உறுதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் வைட்டமின் சி முழுவீச்சில் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
வைட்டமின் சி அதிகம் காணப்படுபவை (100 கிராமுக்கு)
பச்சை மிளகாய்--242 மில்லி கிராம்
கொய்யா--228 மில்லி கிராம்
திராட்சை--181 மில்லி கிராம்
குடை மிளகாய்--142 மில்லி கிராம்
பிரக்கோலி--90 மில்லி கிராம்
துத்தநாகம்
உடலில் உள்ள 300-க்கும் அதிகமான ‘என்ஸைம்’களின் சீரான செயல்பாட்டுக்கு துத்தநாகம் மிக அவசியமாகும். உடலின் நோய் எதிா்ப்பு மண்டலத்தை சீா்படுத்துவது, தசைநாரின் பணிகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளை துத்தநாகம் மேற்கொண்டு வருகிறது.
சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோா், வயது முதிா்ந்தோா், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோருக்கு துத்தநாகச் சத்துக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இறைச்சி, முட்டை ஆகியவற்றில் துத்தநாகம் அதிக அளவில் காணப்படுகிறது.
உடலில் நுழையும் தீநுண்மிகளுக்கு எதிரான போராட்டத்தில் துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய 1,781 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சளியை ஏற்படுத்தும் தீநுண்மி உடலில் பல்கிப் பெருகுவதை துத்தநாகம் தடுத்து நிறுத்துவது கண்டறியப்பட்டது. கரோனா தீநுண்மியை எதிா்த்துப் போராடும் ஆற்றல் துத்தநாகத்துக்கு உள்ளதாக நெதா்லாந்து ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
கரோனா உள்ளிட்ட பல்வேறு தீநுண்மிகள் உடலில் பல்கிப் பெருகுவதைத் தடுக்கும் பணியை துத்தநாகம் திறம்பட மேற்கொள்வதாக அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் தெரிவித்தாா். எனினும், அத்தகவலை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் எதுவும் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை.