முகப்பு
கல்வி

தேசிய கராத்தே போட்டி: ஸ்ரீவிலி. மாணவர்கள் வெற்றி

ஜப்பான் சிட்சோரியூ கராத்தே டூ-காய், இந்திய சென்புகாய் சார்பில் நாகர்கோவில், ஜெபமலை மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர்.

கல்வி

தேசிய கராத்தே போட்டி: ஸ்ரீவிலி. மாணவர்கள் வெற்றி

ஜப்பான் சிட்சோரியூ கராத்தே டூ-காய், இந்திய சென்புகாய் சார்பில் நாகர்கோவில், ஜெபமலை மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ஜப்பான் சிட்சோரியூ கராத்தே டூ-காய், இந்திய சென்புகாய் சார்பில் நாகர்கோவில், ஜெபமலை மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர்.

போட்டிகள் டிசம்பர் 1, 2-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் ஜப்பான் சோட்டோக்கான் டென்சின்கான் கராத்தே தமிழ்நாடு சார்பில் அதன் தலைமை பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். 20-25 கிலோ எடை பிரிவில் மகாத்மா வித்யாலயாவின் எஸ்.கார்த்திகாயினி முதல் இடமும், 9 வயது கட்டா பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றார்.

ஆராய்ச்சிபட்டி காமராஜர் பள்ளி மாணவர் சுந்தர் (எ) அரசு 35-40 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். தியாகராசா மேல்நிலைப் பள்ளி மாணவர் பாலகணபதி 35-40 கிலோ எடை பிரிவில் இரண்டாவது இடத்தையும், சோட்டோகான் பள்ளி மாணவி விஜய சூரிய சுபசங்கரி 19 வயது பிரிவில் பிளாக் பெல்ட் கட்டா பிரிவில் முதல் இடத்தையும் பெற்றார்.

ராஜபாளையம், ராஜூக்கள் கல்லூரி மாணவர் அரிஸ்டோபால் 45-50 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி மாணவி மணிமேகலை 35-40 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவ மாணவியரின் சாதனையை பாராட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல் பரிசு வழங்கி கௌரவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →