முகப்பு
கல்வி

என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 3 கல்லூரிகள் மற்றும் 18 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றுள்ள சிறப்பு என்.சி.சி. முகாமில் வெள்ளிக்கிழமை துப்பாகி சுடும் பயிற்சி நடைபெற்றது.

Updated On : 27 செப்டம்பர், 2013 at 1:40 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 3 கல்லூரிகள் மற்றும் 18 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றுள்ள சிறப்பு என்.சி.சி. முகாமில் வெள்ளிக்கிழமை துப்பாகி சுடும் பயிற்சி நடைபெற்றது.

5 தமிழ்நாடு சைகை என்.சி.சி. அணி சார்பில் 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை கட்டளை அதிகாரி எஸ்.கே.ஷா, என்.சி.சி. அதிகாரிகள் பொன்னியின் செல்வன், ஜே.சி.ஓ. வர்கீஸ், லல்லு பிரசாத் ஆகியோர் அளித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.