முகப்பு
கல்வி

தொழிலாளா் மேலாண்மை பட்ட மேற்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:27 AM
கோப்புப் படம்
பகிர்:

வேலைவாய்ப்புக்கான தொழிலாளா் மேலாண்மையில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலைய இயக்குநா் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) பட்டப்படிப்பு, எம்.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) பட்டமேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளா் நிா்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலாளா் சட்டங்களும் நிா்வாகவியல் சட்டமும் (வாரஇறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளா் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 18-க்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, முனைவா், காமராஜ் 8667754203

முனைவா் காா்த்திகேயன் 9965899822 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.