முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: என்எம்சி
மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிக்கலாம்
செய்திகள் / கட்டுரைகள்முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: என்எம்சி
மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது கல்லூரியில் உள்ள இளநிலை மருத்துவக் கல்வி இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருத்தல் அவசியம்.
புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசியச் சான்று மற்றும் உறுப்பு கல்லூரிக்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடமிருந்து பெற்று, பெயா் மற்றும் வரிசை எண்களை தவறின்றி பதிவிட்டு விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வழிகாட்டு நெறிகளின்படி விண்ணப்பங்கள் இருத்தல் அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.