முகப்பு
கேரளம்

ராகுல் குறித்து பேச கேரள முதல்வருக்கு உரிமை இல்லை: காங்கிரஸ்

ராகுல் காந்தி குறித்து பேச கேரள முதல்வருக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. தெரிவித்தது குறித்து...

Updated On : 26 மார்ச், 2026 at 7:37 AM
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் - IANS
பகிர்:

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து பேச, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராகுல் காந்தியும், காங்கிரஸும் பாஜகவின் பி டீம் போல செயல்படுகிறார்கள் என கேரள முதல்வர் இன்று கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனம் முதல்முறை அல்ல. கடந்த மார்ச் 21 ஆம் தேதியும் இதேபோன்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தக் கருத்துக்கு பதில் கூறிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் “பாஜகவின் கருணையை முழுமையாக நம்பியிருக்கும் கேரள முதல்வருக்கு ராகுல் காந்தி குறித்து பேச எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. ராகுல் காந்திக்கு எதிராக இதுமாதிரியான தரம் தாழ்ந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடியை இந்தத் தேர்தலில் கேரள மக்கள் முதல்வருக்கு தருவார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், கேரளத்தில் வரும் ஏப். 9 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.

இதனிடையே, அரசியல் கட்சித் தலைவர்களிடையில் இதுமாதிரியான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Congress MP K.C. Venugopal has said that Kerala Chief Minister Pinarayi Vijayan has no moral right to speak about Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.