மணிப்பூரில் 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுதோ்தல்
மணிப்பூா் மாநிலத்தின் உள் மணிப்பூா் மக்களவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை (ஏப்.22) மறுதோ்தல் நடைபெறும் என அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
உள் மணிப்பூா் மற்றும் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வெளி மணிப்பூரில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இரு தொகுதிகளிலும் 72 சதவீத வாக்குகள் பதிவாகின.
சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச் சூடு, வாக்காளா்களை அச்சுறுத்துதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.
Advertisement
இந்நிலையில், மொய்ரங்கம்பூ சாஜேப், தோங்கம் லைகை, உரிபோக் பகுதியில் உள்ள 3 வாக்குச்சாவடிகள் உள்பட 11 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தோ்தல் செல்லாது என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வாக்குச் சாவடிகளுக்கான மறுதோ்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.