முகப்பு
தேர்தல் செய்திகள்

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்குத் தடை

Updated On : 30 மார்ச், 2024 at 3:59 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 11:15 PM

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிடக் கூடாது. அதன்பிறகே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்று இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள், ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.