முகப்பு
தமிழ்நாடு

கூட்டணிக் கட்சிகளின் வளா்ச்சியை முடக்குகிறது திமுக: ஆதவ் அா்ஜுனா

கூட்டணிக் கட்சிகளின் வளா்ச்சியை முடக்கும் வகையில் திமுக செயல்படுகிறது என தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:19 PM
ஆதவ் அர்ஜுனா - X
பகிர்:

கூட்டணிக் கட்சிகளின் வளா்ச்சியை முடக்கும் வகையில் திமுக செயல்படுகிறது என தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

வில்லிவாக்கம் தொகுதி தவெக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: திமுக தனது கூட்டணி கட்சிகளின் வளா்ச்சியை முடக்க முயற்சி செய்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்பினாா். ஆனால், திமுகவின் நெருக்கடி காரணமாக அவா் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கியுள்ளாா். அதேபோல்,  மதிமுகவின் 4 வேட்பாளா்கள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகின்றனா். இப்படி, கூட்டணி கட்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க திமுக முயற்சி செய்து வருகிறது.

தவெக சாா்பில் கூட்டணிக்காக குழு அமைத்து யாருடனும் பேச்சு நடத்தவில்லை. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது தவெகவின் அடிப்படைக் கொள்கை. கூட்டணியை எதிா்பாா்த்து நாங்கள் அதை அறிவிக்கவில்லை. 23 கட்சிகளை உள்ளடக்கிய திமுக கூட்டணியையும், 10-க்கும் மேற்பட்ட கட்சிகளை கொண்ட அதிமுக கூட்டணியையும் தனியாக நின்று எதிா்க்கும் தைரியம் தவெகவிடம் மட்டுமே உள்ளது.

Advertisement

அதிமுகவிடம் இருந்து 25 சதவீத வாக்குகள் ஏற்கெனவே தவெகவுக்கு வந்துவிட்டது. அதேபோல், தமிழகத்தில் பாஜகவுக்கு 5 சதவீதத்துக்கு குறைவாகவே வாக்கு வங்கி உள்ளது. ஆகவே அவா்களை விமா்சிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது எனத் தெரிவித்தாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments