முகப்பு
தமிழ்நாடு

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு தாக்கல்!

தமிழிசை சௌந்தரராஜன் வேட்புமனு தாக்கல் பற்றி..

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:31 AM
Tamilisai Soundararajan - DPS
பகிர்:

மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்,

என்னுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் உடன் இருந்தார். யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை இந்த சூழலே சொல்கிறது.

Advertisement

தற்போது சூரியன் மறைந்து இருக்கிறது. மழை வந்து கொண்டிருக்கிறது தாமரை மலரும். அதுதான் எங்களின் தாரக மந்திரம், இயற்கையே சூரியனை மறைய வைத்து மழையை வரவழைத்து தாமரையை மலர வைத்திருக்கிறது.

தாமரையோடு இலையும் சேர்ந்து மலரும். மயிலாப்பூரில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது இந்த தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்ற உள்ளேன். வாரத்தில் இரண்டு நாள் எப்போதும் மயிலாப்பூரில் இருப்பேன்.

மயிலாப்பூர் த. வேலு திமுக வேட்பாளர் வேலுவை வேல் வைத்து அப்புறப்படுத்துவோம். மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போக்குவரத்து நெரிசல் , குடிசை மக்களுக்கு வீடு கட்டி அளித்ததில் ஊழல் என பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பேன் மீனவர்கள் பிரச்னை தீர்ப்பதற்குத் தனியாக ஒரு துறையை நாங்கள் வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

summary

Tamilisai Soundararajan, the BJP candidate contesting in the Mylapore Assembly constituency, filed her nomination papers with Returning Officer Vijayalakshmi, accompanied by Union Minister Piyush Goyal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments