மயிலாப்பூரில் த. வேலுவுக்கு எதிராக தமிழிசை சௌந்தர்ராஜன்!
மயிலாப்பூர் தொகுதியில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பாளராக அறிவிப்பு..
சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜகவின் முக்கிய தலைவர்களாக விளங்கும் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியில்,கோவை வடக்கில் வானதி, அவினாசியில் எல். முருகன் போட்டியிடுகின்றனர்.
அதேசமயம் சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் இவர் முதன்முறையாக களம் காண்கிறார்.
முன்னதாக, மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், யாருக்கு இந்த வழங்கப்படுவது என்ற சிக்கல் பாஜகவினர் இடையே நிலவி வந்தது.
மார்ச் 25ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் இணைந்து அதிமுகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இன்று பாஜகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 27 பேரின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியான நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌர்ராஜன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வேலு போட்டியிடுகிறார்.