முகப்பு
தமிழ்நாடு

குழந்தைகளுக்கு சளி பிடித்தால், விசில் ஊதினால் சரியாகிவிடும்! செங்கோட்டையன்

திருச்செங்கோட்டில் செங்கோட்டையன் பிரசாரம் பற்றி...

Updated On : 6 ஏப்ரல் 2026, 11:22 am IST
செங்கோட்டையன் - கோப்புப்படம்
பகிர்:

குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் அடித்தால் போது சளி நின்றுவிடும் என்று தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகின்றது.

இந்த நிலையில், திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளரை ஆதரித்து செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

அப்போது அவர் பேசுகையில்,

”குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் ஊதினால் போதும் சளி நின்றுவிடும். ஆயுர்வேதத்தில் மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள்.

நல்ல பெரிய விசிலாக கொடுத்து அடிக்கச் சொன்னால் இதயம் நன்றாக பம்பு ஆகும். இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால்தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

summary

Sengottaiyan Campaigns in Tiruchengode...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.