முகப்பு
தமிழ்நாடு

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை நடத்தியது பற்றி...

Updated On : 10 ஏப்ரல் 2026, 12:03 pm IST
அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை - X
பகிர்:

உதகையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், உதகையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜ ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை சென்றுள்ளார்.

Advertisement

Advertisement

இதனிடையே, அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். 10 நிமிஷங்கள் சோதனை நடந்த நிலையில், அதன்பின்னர் அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

- X

இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் கார்கள், பிரசார வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

summary

Flying Squad Conducts Inspection on Helicopter Carrying Annamalai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.