நாளை வாக்குப்பதிவு: முன்னேற்பாடுகள் தீவிரம்! - நேரலை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் நேரலை...
நாளை வாக்குப்பதிவு: விமானக் கட்டணம் பலமடங்கு உயர்வு!
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான விமானக் கட்டணம் ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 4,000 - ரூ. 5,000 வரை இருக்கும் நிலையில் தற்போது ரூ. 14,000 வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து 1,88,705 பேர் பயணம்!
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளில் 1,88,705 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு (ஏப்.21) பயணம் செய்துள்ளனர்.
வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்ள...
https://electoralsearch.eci.gov.in இணைய முகவரி, Voter Helpline App அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்னை பயன்படுத்தி தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Advertisement
வாக்குச்சாவடிக்குள் மொபைல், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 காவல்துறையினர்!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் 21,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.