காஞ்சிபுரம்: திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி!
திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு அருகில் இருந்த வாக்குச்சாவடிக்கு ஜோடியாக வந்து மணமகன் ஜனநாயகக் கடமையாற்றியாற்றினார்.
காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ராகுல். இவர் கட்டடப் பொறியாளர், வீடு கட்டும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் சிவரஞ்சனிக்கும் இன்று காலை காஞ்சிபுரத்தில் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
Advertisement
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் ஜோடியாக அருகில் இருந்த விக்டோரியா நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்றனர். அங்கு திருமண கோலத்தில் மணமகன் ரவி ராகுல் தனது வாக்கை செலுத்தினார்.
இதுகுறித்து மணமகன் ரவி ராகுல் கூறுகையில், ”அனைவரும் வாக்களிப்பது என்பது கட்டாயம். மேலும் இந்த திருமண நாளில் வாக்கு செலுத்தியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது எனவும், தமிழகமே அதிக அளவி்ல் 100 சதவிகித வாக்குகளை எதிர்பார்க்கிறது” என்றார்.
வாக்கு செலுத்த வந்த மணமக்களுக்கு வாக்குச் சாவடியில் இருந்த அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.