5 மாதங்கள் மட்டுமே பதவி வகித்த எம்எல்ஏ!
5 மாதங்கள் மட்டுமே பதவி வகித்த எம்எல்ஏ!
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக 5 மாதம் 10 நாள்கள் மட்டுமே பதவி வகித்துள்ளார் கி. சத்தியசீலன் (87).
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் 1967, 1971, 1977, 1980 ஆகிய நான்கு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என். கிட்டப்பா. 1984-ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பிறகு 1984-இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கி. சத்தியசீலன் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். ஆனால், அதே ஆண்டு (1984) இறுதியில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், 1984-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிமுதல் நவ. 15 வரை 5 மாதம் 10 நாள் மட்டுமே பதவி வகித்தார்.
இதைத் தொடர்ந்து, 1984-ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட சி. சத்தியசீலன் அதிமுக வேட்பாளர் எம்.தங்கமணியிடம் 4,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கி. சத்தியசீலனுக்கு 2023-ஆம் ஆண்டு திமுக சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.