மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!
மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்
மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேருந்து நிலையம் அருகே விஜய் பேசியதாவது:
கடல் தாய் வீடு திட்டத்தில் குடிசை வீடுகளை அகற்றி, சிதிலமடைந்த மீனவர்களின் வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும்.
Advertisement
சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் படகுகள் திரும்பப் பெறப்படும் வரை, படகு பாதுகாப்பு நிதி என்ற பெயரில் இடைக்கால நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
மீனவர் பாதுகாப்பு உரிமைத்தொகை 8 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மீனவர் எரிபொருள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மானிய டீசல் 3,500 லிட்டராக உயர்த்தப்படும்.
ஒரு லிட்டருக்கு ரூ.15 என்ற நிலையான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.
இது வெறும் தொடக்கம் தான். திமுக கொடுப்பதைப்போன்ற வெற்று வாக்குறுதிகள் கிடையாது. உங்களை உண்மையாக நேசிப்பதன் வெளிப்பாடு என விஜய் பேசினார்.