முகப்பு
செய்திகள்

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்

Updated On : 12 ஏப்ரல், 2026 at 5:02 PM
மீனவ மக்களிடையே வாகு சேகரித்த விஜய் - யூடியூப் / Tamilaga Vettri Kazhagam
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 5:00 PM

மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேருந்து நிலையம் அருகே விஜய் பேசியதாவது:

கடல் தாய் வீடு திட்டத்தில் குடிசை வீடுகளை அகற்றி, சிதிலமடைந்த மீனவர்களின் வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும்.

Advertisement

சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் படகுகள் திரும்பப் பெறப்படும் வரை, படகு பாதுகாப்பு நிதி என்ற பெயரில் இடைக்கால நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

மீனவர் பாதுகாப்பு உரிமைத்தொகை 8 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

மீனவர் எரிபொருள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மானிய டீசல் 3,500 லிட்டராக உயர்த்தப்படும்.

ஒரு லிட்டருக்கு ரூ.15 என்ற நிலையான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.

இது வெறும் தொடக்கம் தான். திமுக கொடுப்பதைப்போன்ற வெற்று வாக்குறுதிகள் கிடையாது. உங்களை உண்மையாக நேசிப்பதன் வெளிப்பாடு என விஜய் பேசினார்.

summary

TN Election 2026 tvk Vijay Made Promises to Fishermans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.