பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்
பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வர் மு.க. ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என இபிஎஸ் விமர்சனம்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வர் மு.க. ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 14) விமர்சித்தார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும் விதமாக நாடாளுமன்றத்தைக் கூட்ட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அரசியல் ஆட்சி அமைப்பில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதனிடையே, தேர்தல் நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது எதற்காக? என முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
Advertisement
இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''தேர்தல் நடக்கும் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படுவது எதற்கு என்று ஸ்டாலின் கேட்கிறார். 5 மாநிலத்தில் மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் இல்லை. தேர்தல் தோல்வி பயத்தில் இத்தகைய கருத்தை முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்களின் நீண்டகால கோரிக்கையான 33% இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறியுள்ளது. பெண்கள் மிகவும் எதிர்பார்த்த கோரிக்கை இது. பெண்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.