மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 2 ஆம் இடத்துக்குத் தள்ளப்படுவதாகத் தகவல்...
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 2 ஆம் இடத்துக்குத் தள்ளப்படும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப். 23 மற்றும் இன்று (ஏப். 29) ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளன.
இதில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முதல்வராகப் பதவி வகித்து வரும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் எனவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ரிஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக 146 - 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 - 140 இடங்களையும் கைப்பற்றும் எனவும், ஜேவிசி டைம்ஸ் நவ் கணிப்பின்படி பாஜக 138 - 159 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 131 - 152 இடங்களையும் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
exit polls indicate that the ruling Trinamool Congress party is being pushed to second place in West Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.